Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் :- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 25 ஆம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரையில் கூறினார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழக அரசும், காவல்துறையும் …

Read More »

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

டெல்லி : இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க …

Read More »

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கடச்சனேந்தலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 3.000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். இந்நிகழ்விற்கு மாநில செயலாளர் மாரி மறவன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் தொண்டரணி செயலாளர் சந்தோஷ் (எ) குட்டி, …

Read More »

“பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” – ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஆன்மா அதானியின் வசம் இருக்கிறது. எனவே நாங்கள் என்னதான் தாக்கினாலும் அது அவரை ஒருபோதும் பாதிக்காது.அதானி, மோடி, ராகுல் பிரதமர் மோடியை பணியமர்த்தியது அதானிதான். எனவே அவருக்காகதான் பிரதமர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதானியை நாங்கள் தாக்க …

Read More »

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட தலைவி ஸ்ரீநிதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அஜீத்குமார் உள்ளனர்.

Read More »

ஆட்டோமொபைல் மட்டுமல்ல.. இனி ஐடியிலும் சென்னை கெத்துதான்.. திறக்கப்பட்ட பிரம்மாண்ட ஐடி பார்க்

சென்னை: சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை இன்று திறந்து வைத்தார். ஆட்டோமொபைல் துறையில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு தற்போது ஐடி துறையிலும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று …

Read More »

‘பெண்ணை தாக்கி நகை பறித்த பா.ஜ.க பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை’ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருடைய மனைவி கலையரசி (35). இவர் கடந்த 8.4.2021 அன்று செஞ்சியில் உள்ள தன் தாய் வீட்டுக்குக் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.Crime அப்போது வழியில் கலையரசி தன் குழந்தையின் மருந்து சீட்டை மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதை எடுப்பதற்காக மரகதபுரத்தில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் வழியில் கண்டியமடை என்ற இடத்தில் …

Read More »

மண் காப்போம் இயக்கம் சார்பாக மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா : நவ.5 ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் ஆணைக்கிணங்க, மதுரை மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் வழிகாட்டுதலின்படிவடக்கு மண்டல தலைவர் சாமுவேல் (எ) சரவணன் தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்மேகம்,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES