
மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வரவேற்பு.!!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார்.
“தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி பேசினர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, கிழக்கு மண்டல் 117 வது வட்டத்தில் (தாமஸ் சாலை) உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை முத்துராமன் ஜி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜா அன்பழகன் ஏற்பாட்டில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் எழுத்து பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் சத்து உணவுகள் ஆப்பிள்,ஆவின் பால் பன்,பிரட் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஏழை தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட ,மண்டல், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரதப் பிரதமரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பாஜகவின் விளையாட்டு( ம) திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் S.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் இறுதி சுற்றை துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.
மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் பாஜகவின் கூடுதல் பொறுப்பாளர் மகா சுசீந்திரன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், கபடி கழக மாநில தலைவர் சோலை ராஜா விளையாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், கராத்தே செல்வகுமார், வர்த்தகப்பிரிவு மாவட்ட செயலாளர் கோல்டு பிச்சை, திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டச் செய்தியாளர் கனகராஜ்
சென்னை,செப்.19:-
பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-
போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 4000 இந்தியர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 2500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் மட்டும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானார் போலி ஏஜென்ட்களின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் மலேசியா குடி வரவு அதிகாரிகள் இவர்களை தஸ்தா வேஜ்கள் அடிப்படையில் கண்டறிந்து கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே Not To Land என்ற முத்திரையிட்டு வந்த விமானத்திலேயே தாயகம் திருப்பி அனுப்பி வைக்கின்ற சம்பவங்கள் தினசரி நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில் மலேசியாவில் விசா இல்லாமல் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் ஒப்புதலின்படி அவர்களை சிறையில் அடைக்கும் பணிகளையும் குடிவரவு அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பு வாய்ப்பை ஜூலை, 2022 மாதத்துடன் நிறுத்திக் கொண்டதால் விசா இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ரூபாய் 60 ஆயிரம் (3100 ரிங்கிட்) அபராதமாக செலுத்தி நாடு திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை தற்பொழுது உள்ளது.
இதையெல்லாம் நன்கு அறிந்த போலி ஏஜெண்டுகள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் நயவஞ்சகத்துடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான மார்க்கமாக அழைத்துச் சென்று பிறகு தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமாக ஊடுருவச் செய்யும் வேலைகளை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. எல்லையை கடக்கும் பொழுது குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக எல்லையை கடப்பவர்களுக்கு வாழ்நாள் சிறை என்ற ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்தை அளிக்கின்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் பொழுது அந்நிய சக்திகள் ஊடுருவல் என்று அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தும் அபாயமும் உள்ளது.
அந்நிய நாட்டுச் சிறையில் இந்தியன் மற்றும் தமிழன் மண்டியிட்டு கிடக்க கூடாது. அதனால் இச்செயலை செய்யும் போலி ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது பற்றி விரிவான விழிப்புணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்.
திரு ராகுல் காந்தி அவர்களின் சொந்த சகோதரி மகளுடன் தனிப்பட்ட குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்து அதற்கு கொச்சையான வசனங்களை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாஜக வினர் பரப்பி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்து அத்தகைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது.
நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு வாட்ஸ் அப் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்…. அதற்கு எனது நண்பன் முஸ்தாக், மீண்டும் தனது நண்பர்களுடன் மாணவனாக வேண்டும் என்று அவரது ஆசையை சொல்லி இருக்கிறார்… பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது நண்பர்களிடம் பேசி ஒரு நண்பனை வரவழைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து மற்ற பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்தனர்…
இது போன்ற வித்தியாசமான மகிழ்ச்சியான செய்திகளை பார்க்கும்பொழுது நாம் அனைவரும் பின்னோக்கி சென்று நமது படிக்கும் காலங்களை நினைக்க வைக்கிறது….
இளைஞர் குரல் சார்பாக பி எஸ் பி பள்ளியின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– இளைஞர் குரல் பாலமுருகன்.