Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 106)

செய்திகள்

All News

மதுரை அவனியாபுரத்தில் டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக , ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் ஆணைக்கு இணங்க டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக அவனியாபுரம் கிளாட்வே குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் டிரஸ்ட் அலுவழகத்தில், ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் டிரஸ்ட் சார்பாக கூத்தியார்குண்டு பகுதியில் மரக்கன்றுகள் நட்டும், ரயில்வே நிலையம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைவர் மணிகண்டன், நாகராஜ், செயலாளர், ரஜேஷ், பொருளார், ராஜேஷ், சரத்குமார், கார்த்திக், புவனேஷ், இன்பராஜ், கோபி, சரவணக்குமார், தர்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

மேலும் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், இர்வின் பார்க்கர், சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிரஸ்ட் அறங்காவலர் எஸ்.பி.பூமிராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் விராதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புளியங்குளம் சிந்தாமணி விராதனூர் சாமநத்தம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூவர்ண கொடி வழங்கப்பட்டது.

விராதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது..

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மணிகண்டன், விராதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெரேசா சகாயமேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

M.O.LEO.Landmark food p..Ltd..,Madurai அருள்மலைச்சாமி முன்னிலை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியை சதீஸ்வரன், அகிலாஸ்மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் மதுரை சுற்றியுள்ள சாலையோர பொதுமக்கள் சுமார் ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கியும் மற்றும் விரகனூர் நெடுஞ்சாலையில் இயற்கை வளத்தை காக்கும் வகையில் 75 மரங்களை நடவு செய்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சுமங்கலி பூஜை, கூழ் காய்ச்சி படைத்தல், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.


இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகளை வைத்து அம்மனுக்கு 108 புஷ்பாஞ்சலி பால் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும் நடைபெற்றது. காலை கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீபுரம் ஸ்ரீநிதிஅம்மா, மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்..

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திர தின விழா

மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ்.பி.எஸ் குகன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜிகர்தாண்டா,சுல்தான், பேட்டா புகழ் நடிகர் காளையன், திரைப்பட நடிகரும், தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க பொதுச்செயலாளர் சி.எம் வினோத் முன்னிலையில் தலைவர் வைரம் ஜப்பார், மதுர பாலா, பரமசிவம், பாலா, அட்சயா தேவகி உறுதிமொழி ஏற்று லஞ்சத்தை ஒழித்திடுவோம், நெஞ்சம் நிமிர்த்திடுவோம், மதுவை ஒழித்திடுவோம்,நம் மனதை மாத்திடுவோம், ஜாதி மதத்தை மறந்துவிடுவோம், சந்தோசமாய் இருந்திடுவோம், நம்மால் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே வாழ்க நம் மக்கள், வளர்க நம் தேசம் என உறுதி மொழி ஏற்றனர்.

இதில் துணை நடிகர்,நடிகைகள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா.!

மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ்.பி.எஸ் குகன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜிகர்தாண்டா,சுல்தான், பேட்டா புகழ் நடிகர் காளையன், திரைப்பட நடிகரும், தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க பொதுச்செயலாளர் சி.எம் வினோத் முன்னிலையில் தலைவர் வைரம் ஜப்பார், மதுர பாலா, பரமசிவம், பாலா, அட்சயா தேவகி உறுதிமொழி ஏற்று லஞ்சத்தை ஒழித்திடுவோம், நெஞ்சம் நிமிர்த்திடுவோம், மதுவை ஒழித்திடுவோம்,நம் மனதை மாத்திடுவோம், ஜாதி மதத்தை மறந்துவிடுவோம், சந்தோசமாய் இருந்திடுவோம், நம்மால் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே வாழ்க நம் மக்கள், வளர்க நம் தேசம் என உறுதி மொழி ஏற்றனர்.

இதில் துணை நடிகர்,நடிகைகள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகினார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.நடந்த சம்பவத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறுகையில்:-

பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்காததால் இங்கு தொடர விரும்பவில்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து என் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி மன்னிப்பு கேட்டுவிட்டேன்.இனி என்னால் உறுதியாக பாஜகவில் இருக்க முடியாது ; காலையில் ராஜினாமா கடிதம் கொடுக்க போகிறேன்.

மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்றும் காலையில் நிகழ்ந்த சம்பவம் மன அமைதியை கெடுத்துவிட்டது, மன அமைதி வேண்டி தற்பொழுது நிதி அமைச்சரை சந்தித்து நேரில் வருத்தமும் மன்னிப்பும் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்..

திமுக தனக்கு தாய்வீடு அதில் மீண்டும் இணைய வேண்டும் என்றெல்லாம் இல்லை.

டாக்டர் தொழிலை பார்க்க போகிறேன்.. திமுகவில் சேர்ந்தால் தவறு இல்லை,

பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்..

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மண்டல பொறுப்பாளருமான ப.பார்த்தசாரதி அவர்கள் மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மாவட்ட பொறுப்பாளருமான கே.கே.கிருஷ்ணன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 5-பகுதி கழகங்கள், 39-வட்ட கழகங்களின் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு, டி.ஆர்.ஓ.காலனியில் உள்ள மாநகர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அந்தந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் தெற்கு தொகுதி பொறுப்பாளர் மனோகரன், துணைச்செயலாளர் காலாங்கரை ராமு, இளமி நாச்சியார், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, பகுதி செயலாளர்கள் மேலமடை ஐயப்பன், கோவிந்தராஜ், இளங்கோ, கோல்டு முருகன், மற்றும் மாணவரணி செயலாளர் காளீஸ்வரன், துணைச் செயலாளர் மணிகண்டன், பிரபு, நெசவாளர் அணி பிரகாஷ், வர்த்தகர் அணி ஜெயபாண்டி, தொழிற்சங்கம் புலிவீரன் உள்பட வட்டக்கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செயலாளர் கனகராஜ்

சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!

தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார்.

மேலும், இவர் தமிழகம் சார்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உலகில் மிகவும் ஆபத்தான எம்.எம்.ஏ. சண்டைகள் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தன்னுடைய எதிரியை வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், பல சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 12-08- 2022 அன்று மாண்புமிகு
தமிழக முதல்வர் இவரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!

தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார்.

மேலும், இவர் தமிழகம் சார்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உலகில் மிகவும் ஆபத்தான எம்.எம்.ஏ. சண்டைகள் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தன்னுடைய எதிரியை வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், பல சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 12-08- 2022 அன்று மாண்புமிகு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES