தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூக சேவகர் அண்ணா நகர் முத்துராமன் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்வில் பூமிராஜா, நாகேந்திரன், குணா அலி, அழகர், கரிசல்குளம் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »மதுரை சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரையிடப்பட்டதை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் திரையிடப்பட்டதை முன்னிட்டு திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவைச் சேர்ந்த தமிழ்நேசன் அவர்கள் எம்ஜிஆர் படம் பொறிக்கப்பட்ட முக கவசங்களை வழங்கினார். மேலும் அதிமுக 51- வது வட்டக்கழக துணைச்செயலாளர் ஜெகதீஷ் பாஸ்கர் ஏற்பாட்டில், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரைப்பட விநியோகஸ்தர் கலைமதி வெங்கடேஷ், ஜான்சிராணி பூங்கா கல்பாலம் சங்கர் உள்பட பலர் …
Read More »மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.!!
மதுரை பாத்திமா நகரில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் துணை நடிகர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், பன்னீர்செல்வம், மணி, பாலா, ராணி, வாசுகி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். …
Read More »மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக,தேவர் ஜெயந்தி அழைப்பிதழ் வழங்கப்பட்டது
அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் அழைப்பிதழை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் அவர்களுக்கு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் பள்ளம் பசும்பொன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சிவபாண்டி ஆகியோர் வழங்கினர்.
Read More »சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரத்தில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா.!!
சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் டாக்டர் டி …
Read More »டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன்
கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்திரு. சுந்தரராஜன்மாவட்ட செயலாளர்திரு. வைமு.பாலாமாவட்ட பொருளாளர்திரு. பிரசாத்மாவட்ட துணை தலைவர்திரு. வினோத்குமார்மாவட்ட துணை செயலாளர்திரு. அதிதி. கார்த்திக்
Read More »மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா.!
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா நடைபெற்றது. பயாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர் பாரூக் வரவேற்றார். இவ்விழாவில் ஷாஜகான் உள்பட குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாரூக் நம்மிடம் கூறுகையில்:- 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் வாளி இலவசம், 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சில்வர் சம்படம் இலவசம், 3000 ரூபாய்க்கு …
Read More »மதுரையில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் பாஜகவில் இணைந்த 500 இளைஞர்கள்.!!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார்.
Read More »அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . இவ்விழாவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா ஏழை.எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக …
Read More »மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!
மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது.புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் …
Read More »