சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் எம்.எஸ்.முருகன், துணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் இருளாண்டி, இஸ்கேப் ஜெயராமன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜலெட்சுமி, மத்திய கிழக்கு பகுதி குழு செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி துணைச் செயலாளர் இரா.முருகன், பஞ்சு ஆலை சங்கம் பாலகிருஷ்ணன், மணி, சித்திக், சித்தநாதன், வீரமாகாளி, முத்துராமலிங்கம், ஜெய்லானி, ராஜசேகர், வடக்கு பகுதி ரத்தினவேல், மணிமேகலை, சுகந்தி, ஏ.ஐ.ஒய்.எப் மாநகர் மாவட்டச் செயலாளர் பழனி முருகன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்: குருவிக்காரன் சாலை வைகை ஆற்றில் வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் அருகில் இருக்கும் டாஸ்மாக் பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் உடைத்து போடப்பட்ட கண்ணாடி பாட்டில்கள் ,நெகிழி குப்பைகள், இருசக்கர வாகன உடைந்த பிஸாஸ்டிக்கள்,தெர்மாக்கூள் , மருந்து குப்பிகள், பயண்படுத்தப்பட்ட ஊசிகள்,சிரஞ்சுகள்,பிஞ்ச செருப்புகள், பழைய தலையனைகள், மெத்தைகள், பழைய துணிகள், பழைய தகரங்கள், உடைந்த போன பொம்மைகள், பழைய சாமி புகைப்படங்கள் கண்ணாடியுடன்,அதிக அளவில் ஆனா மாத்திரைகள் உட்பட நிறுவனங்கள், டாஸ்மாக் பார் குப்பைகள், பொதுமக்கள் வீட்டு குப்பைகள் சுவரின் மேல் இருந்து வைகை ஆற்றில் கொட்டப்பட்டு இருந்தன.
ஆற்றில் சுவர்கள் எழுப்ப பட்டு இருந்ததால் மக்கள் கொட்டிய குப்பைகள் அப்படியே நிறம்பி கிடைக்கிறது. மதுரை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் மதுரை நகரில் எல்லா இடங்களிலும் குப்பைகள் உள்ளன.மாநகராட்சி பணியாளர்கள் ஆற்றில் உள்ளே இறங்கி தூய்மை பணி மேற்கொள்வது இல்லை. தற்போது தண்ணீர் செல்வதால் குப்பைகள் கொஞ்சம் அடித்து செல்கிறது. மற்றபடி நெகிழி பைகள் ஆற்றில் நிறைந்த கிடக்கிறது. இப்படியே அகற்றாமல் விட்டால் நெகிழி மலைபோல குவிந்து கிடக்கும். மதுரை மண் வளம் பெரிதளவில் பாதிக்கும். ஏற்கனவே கரையில் சுவர்கள் எழுப்ப தோண்டிய போது தோண்ட தோண்ட பாலீத்தின் பைகள் மக்காமல் இருந்தன மேலும் மேலும் குப்பைகள் கொட்ட ஆற்றில் அதிகம் பாலீத்தீன் பைகளே நிறைந்த இருக்கும்.
இந்த ஆய்வில் மதுரை நகரில் ஆற்றின் கரையில் வாழும் மக்கள் வைகை ஆற்றை மிகப்பெரிய குப்பை தொட்டியாக பயண்படுத்தி வருகின்றனர் என்பது தெரிகிறது. ஆற்றை மாசுப்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆய்வில் கல்லூரி மாணவர்கள் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன், மணிகண்டன், ஆறுமுகம், இராஜசேகரன், அருன் , ஆகாஷ் உட்பட கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி ஆகியோர் வழங்கிப் பாராட்டினார்கள்.
மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ ஆலோசகர் முஸ்தபா, நிர்வாக பொருளாளர் சீனிரபீக் ராஜா, செயலாளர் நிஜாமுதீன், இணைச் செயலாளர் ராஜா (எ)நிஜாம் அன்சாரி, பொருளாளர் ஃபெரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது
மதுரை கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவ/ மாணவிகளை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டது. புத்த பத்மாசனா நிலையில் 110 மாணவ/மாணவிகள் தமது உடலை தொடர்ந்து 30 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.
இந்நிகழ்வில் கொரோணா தொற்றுநோய் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர்,மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி போன்றோர் வழங்கிப் பாராட்டினார்கள்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75-வது பொன்விழா, மற்றும் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜனவரி 5-ஆம் தேதி அன்று மதுரை காந்தி மியூசியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சன் டிவி, விஜய் டிவி காமெடி நடிகர்கள் பங்கேற்கும் மதுரையை கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மேலும் துணை நடிகர், நடிகைகளுக்கு சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அடையாள அட்டை மற்றும் நியமன சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மனித உரிமை கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட தலைவரும், திரைப்பட நடிகருமான வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் இருதயராஜ், பழனிச்சாமி, அய்யனார், குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகன், பன்னீர்செல்வம், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்
ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் “பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு – குழந்தைகளின் பிறப்புரிமை” என்பதாகும்
இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர்.
அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில் பெரிய கர்ப்பப் பை கட்டி இருந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து ஒரு நாள் ஆன குழந்தையை வெளியே எடுத்தது சாதனையாக அமைந்தது. மேலும் மெகோனியம் ஆஸ்பிரேசன் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு சுவாச சிகிச்சை மற்றும் மூளைப் பாதுகாப்புக்கு குளிர்விப்பு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பை வழங்கி அப்போலோ ரீச் அந்தக் குழந்தையை காப்பாற்றியது. நரம்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.
குழந்தையின் முதல் 28 நாட்களில் சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்று. சிகிச்சையில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போலோ ரீச் மருத்துவமனையில், பல்வேறு குறைபாடுகள் கொண்ட 41 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான, நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இதில் 94 சதவீதம் குழந்தைகள் உயிர் பிழைத்து நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு காரைக்குடியில் உள்ள அப்போலோ ரீச் மருத்துவமனையில், தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) நீலக்கண்ணன் தலைமையில் நடந்தது. மருத்துவமனை நிர்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்
ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் “பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு – குழந்தைகளின் பிறப்புரிமை” என்பதாகும்
இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர்.
அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில் பெரிய கர்ப்பப் பை கட்டி இருந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து ஒரு நாள் ஆன குழந்தையை வெளியே எடுத்தது சாதனையாக அமைந்தது. மேலும் மெகோனியம் ஆஸ்பிரேசன் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு சுவாச சிகிச்சை மற்றும் மூளைப் பாதுகாப்புக்கு குளிர்விப்பு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பை வழங்கி அப்போலோ ரீச் அந்தக் குழந்தையை காப்பாற்றியது. நரம்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.
குழந்தையின் முதல் 28 நாட்களில் சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்று. சிகிச்சையில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போலோ ரீச் மருத்துவமனையில், பல்வேறு குறைபாடுகள் கொண்ட 41 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான, நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இதில் 94 சதவீதம் குழந்தைகள் உயிர் பிழைத்து நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு காரைக்குடியில் உள்ள அப்போலோ ரீச் மருத்துவமனையில், தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) நீலக்கண்ணன் தலைமையில் நடந்தது. மருத்துவமனை நிர்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.