Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்

*திண்டுக்கல் : நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்* திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 21.09.2019 ம் தேதியன்று மானா மூனா கோவிலூர் அருகே உள்ள குளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் மற்றும் ஆயுதப் படை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆயுதப்படை¸ ஆய்வாளர்கள்¸ சார்பு ஆய்வாளர்கள்¸ காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் …

Read More »

தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி.

தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி. தமிழகம் தவிர்த்து மற்ற பிற மாநிலங்களான திரிபுரா ஹரியானா ஆந்திர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு குறைந்த விலையில் ரூபாய் 15.59 வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வெங்காயம் தாறுமாறாக சுமார் ரூபாய் 50 க்கு விற்பனையாகிறது மத்திய அரசு பெரியாரின் மீது உள்ள …

Read More »

எச்சரிக்கை – எதிர்கால விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று விடுமோ?

இந்தியா ஒரு விவசாய நாடு.. இப்பொழுது இந்தியாவில் விவசாயம் தலைநிமிர்ந்து நிற்கிறதா? இல்லை…. கடந்த மாதங்களில் இந்தியா மிகச் சரியாகச் சொன்னால் அனைத்து துறைகளிலும் சரிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக விவசாயத்தில் முற்றிலுமாக அழியும் என்று அனைத்து மக்களின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த நாட்டின் மக்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தை முன்னிலைப்படுத்தி எந்த செயலும் செய்யக் கூடாது?… இதையெல்லாம் …

Read More »

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல்?

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் …

Read More »

பெயரோ அவசர வாகனம் ஆனால் நிற்பதோ நடு வழியில் – 108

108 ஆம்புலன்ஸ் குஜிலியம்பாறை மருத்துவமனையில் இருந்து கரூர் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை ஏற்றி வரும்போது தண்ணீர்ப்பந்தல் என்ற கிராமத்தில் அவசர வாகனம் கோளாறு ஆகி நின்றது. இப்பொழுது அந்த நோயாளியின் நிலைமை என்னவாகும்?. அவசர வாகனத்தை எடுக்கும் முன்னர் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் வாகனத்தை இயக்குவது நன்றாக இருக்கும்.   மாற்று வாகனம் தண்ணீர் பந்தலுக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது …

Read More »

சட்ட விழிப்புணர்வு வகுப்பு

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் …

Read More »

நண்பர்களே நாம் வளர்க்கும் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

எந்த ஒரு வளர்ப்பு பிராணி கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். வெறி நாய் கடித்ததின் விளைவு இச்சிறுவன் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான். வெறிநாய்கடி கடித்த 12 மணிநேரத்தில் அதற்கு ஏற்ற தடுப்பூசி போடபட வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்.

Read More »

கரூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாடு இளைஞர் கட்சி கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம். கரூர்.24.09.19. தமிழகத்தில் 1170 ஏக்கர் பரப்பளவில் 5 ஆவது மிக பெரிய ஏரி நமது கரூரில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி ஆகும். காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரியில் சென்று சேர்த்தால் 300 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு 25 வருவாய் கிராமங்களின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு, விவசாயம் …

Read More »

அதிகாரிகளை இடம் மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல்அடுத்த …

Read More »

பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ???

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தது குளத்துப்பாளையம் ஜாமியா நகர் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தோடு மக்கள் வசிக்கின்றனர்…… ஆனால் அடிப்படை தேவை என்பது சாலை….. இங்கு 20 வருடமாக சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள மண் ரோட்டில் மக்கள் வாழ்ந்து தவித்து வருகிறார்கள் என்பது முதல் விஷயம்……… பிறகு மழைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சோதனை என்பதைவிட மிகவும் மனவேதனை…….. …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES